என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


30 மார்., 2016

ஈரோட்டில் மூன்றாவது ஆன்மிக சந்திப்பு கூட்டம்

ஈரோட்டில் மூன்றாவது ஆன்மிக சந்திப்பு கூட்டம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி ஞாயிறு அன்று நமது இரகசியம் புலப்படும் குழுவின் 3 வது சந்திப்பு கூட்டம் கொங்கு மண்டலம் ஈரோடு மாநகரத்தில் பெருந்துறை ரோடு MLA அலுவலகம் பின்புறம் உள்ள மெரினா குடும்ப உணவகம் மீட்டிங் ஹாலில் நடைபெற உள்ளது.

நேரம் காலை 10 மணி முதல் 5மணி வரை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அளிக்கப்படும் கருத்துரைகள் விவரம் வருமாறு:

தன்னை அறிதல்,
தன்னை அறிதலால் உண்டாகும் பலன்கள்,
சர கலை பயற்சி
நாடிசுத்தி,
பிராணாயாமம்,
தியான பயிற்சி,
ஜோதிடம்
காயத்ரி சாதனை அறிமுகம்,
ஸ்ரீ அகத்தியர் யோக சாதனை அறிமுகம்,
எண்ணங்களும் வாழ்வும்
பற்றிய விழிப்புணர்வு
மற்றும் பல

மேலும் திரு ஸ்ரீ சக்தி சுமனன் ஐயா அவர்களின் அகத்தியர் யோக ஞான திறவுகோல் புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும்.

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திரு பிரசாத் 9791305175 அல்லது சண்முகம் 9590766607  தனியே whatssup செய்தி மூலமாகவோ அல்லது போனில் தெரிவித்து பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்

🌹நல்லதே நடக்கும்,வாழ்க வளமுடன்🌺

17 மார்., 2016

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்



அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்

அகத்திய மகரிஷி சித்தர் மார்க்கத்தில் பேரொளி நிலையினை பெற விரும்பும் சாதகன் அறிய வேண்டிய அடிப்படை ஞானத்தை முப்பது பாடல்களில் பரிபாஷையாக சுருக்கி தந்ததை அனைவரும் விளங்கும் படி எளிமையாக விளக்கவுரையாக திறந்து கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

தாழ்ந்த நிலத்திலேயே நீர் பாய்வது போல், அழுத்தம் குறைந்த இடத்திற்கே சக்தி பாய்வதை போல், பணிவும் தாகமும் இருக்கும் பக்குவப்பட்ட ஆன்மாவிற்கே குருவின் அருளும் பாயும்.

இந்த பண்புகளை எப்படி பெறுவது?

இதற்கு விடை கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்
பன்னிரண்டு வருட குரு குல வாசம் ஏன் கட்டாயம் என்று சித்தர், ரிஷி பரம்பரையில் கூறப்பட்டதன் விளக்கம் என்ன?

விடைகூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.


சித்தர்களின் பரிபாஷை என்பது மறைப்பாக கூறப்பட்ட குழுக்குறி என்று பொதுவாக வியாக்கியானம் செய்யபட்டு வருகிறது,

இவற்றை எல்லோரும் விளங்கி கொள்ள முடியுமா?

என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலுடன் எப்படி என்ற விளக்கத்தையும் தருகிறது, அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

பரி, வாசி, வாலை என்ற மூன்று சொற்களும் சித்தர் வழியில் முன்னேற விரும்பும் மாணவன் அறியவேண்டிய இரகசியங்கள்.

இதனை திறந்து விளக்கம் கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

ஒருவன் தனது ஆன்மீக பயணத்தில் குருவின் துணை அவசியம். இதனை எப்படி பெறுவது?

தனது முன்னேற்றம் தடைப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை அனுபவ அறிவுரையாக கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

-----------

அகத்தியர் யோக ஞானத்திறவு கோல் நூலில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் : பகுதி - I

1. மெஞ்ஞான குருவின் தன்மை
வித்தை தரும் சத்குருவின் தன்மை

2. யோக சாதகனுக்கு இருக்க வேண்டிய பண்புகள்

3. பன்னிரண்டு ஆண்டுகள் குருவை அண்டி யோக

4. சாதனை பயில்வதற்கான அவசியம்

5. ஓரெழுத்து மந்திரமும் அதன் சிறப்புகளும்

6. பரி, வாசி, வாலை ஆகியவற்றின் யோக விளக்கம்

7. குருபத தியானத்தின் அவசியம்

8. யோகத்தில் அடைய வேண்டிய நிலைகள்

9. ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் விளக்கம்

10. பிரணாயாமம் பழகுவதற்கு அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டியவை

11. பிராண வலிமையின் பயன்

12. வகார மாறலின் விளக்கம்

13. வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றில் சாதகன் அறியவேண்டியவை எவை?

14. வாமபூசை இரகசியம்

15. மனமும் அதன் திரிபுகளும்

16. மனதிற்கும் சூரிய சந்திரர்களுக்குமான தொடர்பு

17. எண்ணம் உதிக்கும் மற்றும் மறையும் இடங்கள்

18. வாசிப் பிரணாயாமம்

19. வாலை என்பதன் விளக்கம்

20. பிரணாயாம சூத்திரம்

21. பிரணாயாம பயிற்சிக்கு குருவின் அவசியம்

22. பிராணனை தச நாடிகளில் தாரணை செய்தல்

23. நாடி தாரணை மந்திரங்கள்

24. மந்திர வித்தெழுத்துக்களின் முடிவின் “ம்”, “ங்” விகுதிகள் சேர்ப்பதற்கான காரணம்

25. சித்தர்கள் கூறும் மௌனம்

26. மனிதனை முக்கோணமாக உருவகித்தால் அதன் கூறுகள்

27. நாடி தாரணையின் அனுபவம்

28. பஞ்சபூத உறைநிலை தளம்

29. பஞ்ச பூத ஒடுக்க நிலை தளம்

30. வாசி - சிவ யோகத்தின் சாரம்

31. நிறங்களுக்கும் சூக்கும சக்கரங்களுக்குமான தொடர்பு

32. குருவின் பாத கமல தியானத்தின் அவசியம்

33. சிவயோகியின் அமிர்தம்

34. மூன்று மண்டலங்கள்

35. விபரீத கரணி முத்திரைகளின் விளக்கம்

36. பஞ்சாக்ஷரத்தின் பொருள்

37. பஞ்சாக்ஷர அடைமொழிகளான ஸ்தூல, சூக்ஷ்ம,

38. அதி சூக்ஷ்ம, காரண, மகாகாரண ஆகியவற்றின் பொருள்

39. அமிர்தம் சுவீகரிக்கும் முறைகள்

40. போகாப்புனல், சாகாக்கால், வேகாத்தலை ஸ்தூல

41. உடல் சுக்கிலத்திற்கும் சூக்ஷ்ம உடல் விந்திற்குமான தொடர்பு

இன்னும் பல அடங்கி உள்ளன.

தன்னை அறிய விரும்பும் ஒருவருக்கு கேள்விகள் அனைத்திற்கும் இதில் விடைகள் உள்ளது

இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்ரீ காயத்ரி சாதனை வகுப்பினை இலங்கையில் இருந்து நடத்தி வரும் திரு சுமனன் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் தியான சாதனை செய்ய விரும்பும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

மேற்படி புத்தகம் வேண்டுவோர் நமது யாஷி பவுண்டேசன் மூன்றாவது சந்திப்பில் நேரில் வாங்கி  கொள்ளலாம்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ளாதவர்கள் சந்திப்பு முடிந்ததும் கூரியர் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

இப்புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் கழிவு தொகை யாஷி பவுண்டேசன் சேவை பணிகளுக்கு உபயோகப் படுத்த படும்

புத்தக பதிப்பக விலை Rs.270 மட்டுமே.

கூரியர் மற்றும் பேக்கிங் சார்ஜ் extra as actual.

வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டிற்கும் அனுப்பி வைக்கப் படும். அதற்க்கான உண்மையான கூரியர் செலவுகள் தனி.

இதற்கு தாங்கள் செய்ய வேண்டியது அடியேனுக்கு 9590766607 என்ற Whatssup எண்ணில் தனி செய்தியாக வரும் ஞாயிற்று கிழமைக்குள் பதிவு செயது விடுங்கள்.

நேரில் வருபவர்கள் நேரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

கூரியரில் பெற வேண்டியவர்களுக்கு செய்ய வேண்டியதைவே தனி செய்தியாக தகவல் தெரிவிக்க படும்

22 ஜன., 2016

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

அறிவியல்
ஆன்மீகம்
ஜோதிடம்
பிரபஞ்சம்
ஆழ்மனம்
மரணம்
உளவியல்
கடவுள்
சித்தர்கள்
நோக்குவர்மம்

போன்ற பல தலைப்புகளில் உள்ள அறிவியல் உண்மைகளை வெளிபடுத்த உள்ளோம். இணைந்திருங்கள் ஒரு மாபெரும் இரகசியம் வெளிப்பட உள்ளது.

Page link www.facebook.com/ragasiyaM123www.facebook.com/ragasiyaM123

7 ஜன., 2016

விதியை மாற்றமுடியுமா?

விதியை மாற்றமுடியுமா?


அறிவியல் தளம்

ஒன்றும் இல்லாத சூன்யத்தில் இருந்து தோன்றி ஒன்றும் இல்லாத சூன்யத்திற்கே செல்வதுதான் பிரபஞ்ச நியதி.


இவ்வாறே நம் முதல் பிறவி எடுக்கும்போது எந்தவித எண்ண பதிவுகளும் இல்லாமல் வெற்று மனதுடன்தான் பிறக்கிறோம். பிறகு நாம் உணரும் அனைத்தும் எண்ண பதிவுகளாக மாறி பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே சிதறி இருந்தாலும் அந்த பதிவுகள் ஒன்றோடொன்று தொடர்பிலேயே உள்ளது. இதுவரை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை இங்கே கூற போகிறேன்.அதாவது நாம் கற்றவை அனைத்தும் நம் மூளையில் பதிவதில்லை. 

அது பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. அதைதான் நாம் மனம் என்று கூறுகிறோம். மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் அளவிற்கு விரிந்து கிடக்கிறது. பஞ்ச பூதங்களின் கலவையான உடல் அழிந்த பிறகு அந்த எண்ண பதிவுகள் மீண்டும் வேறொரு உடலை எடுத்து நிறைவேறாத(pending) விஷயங்களை பூர்த்தி செய்துகொள்கிறது. 

எப்படி என்றால் நம் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் எந்த நேரத்தில் எந்த இடத்தில் யாருக்கு பிறந்தால் நம் ஆசைகள்(நல்லவையோ கெட்டவையோ) நிறைவேறுமோ அப்படி பிறக்க வைப்பது நம் எண்ணங்களின் வேலை. 

அதன் பிறகு அதை செயல்பட வைப்பது உடு மண்டல கோள்களின் வேலை. இவை அனைத்தும் பிரபஞ்ச கணக்கின்படி மிக துல்லியமாக நடக்கிறது. கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம் உடல் அணுக்களின் அதிர்வுகளை மாற்றி அது உணர்வுகளை மாற்றி நம் எண்ணங்களை மாற்றுகிறது. எண்ணங்களானது அதற்கு ஒத்த விஷயங்களை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. 

ஆக நம் எண்ணங்களின் தீவிரத்தை அதிகபடுத்தி தேவையான விஷயங்களில் கவனத்தை குவிக்கும்போது கோள்களின் காந்த அலைகளால் நமக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. 

இவ்வாறு நாம் ஆசைபட்ட அனைத்தும் அனுபவித்து தீர்ந்தபின் நம் பிறப்பு ஒரு முடிவுக்கு வருகிறது.

ஆன்மீக தளம்

கடவுள் மனிதனை படைத்தது மற்ற உயிர்களை பாதுகாக்கவே. ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக பல உயிர்களுக்கு தீங்கிழைக்கிறான். இந்த கர்ம வினைகளை அவன் ஒவ்வோர் பிறவியிலும் கண்டிப்பாக தீர்தே ஆக வேண்டும்.

மாறாக நாம் மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டே போனால் பிறவி பெருங்கடலை நாம் என்றுமே கடக்க முடியாது.

தூராதி தூரமடி தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ பாழ்வினை தீரவென்றால்

பீனியல் கிளான்ட் எனும் சுழிமுனை நாடியில் மனம் லயிக்கும் போது நம் வினைகள் அழிக்கபடுகிறது. மேலும் ஆழமாக பயணிப்போம் தொடரும் 

நன்றி..........

உங்கள் பிரசாத்

11 டிச., 2015

இரகசியம் புலப்படும் குழுவின் 2 வது சந்திப்பு அறிவிப்பு

 🌹அனைவருக்கும் வணக்கம்🌹

வருகிற டிசம்பர் 13/12/2015 அன்று சென்னையில் இரண்டாம் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.

கூட்டத்தில் ஜோதிடம் மருத்துவம் வர்மம் தியானம் யோகா ESP பிராணாயாமம் சரகலை வாசியோகம் ஆவிகள் ஆல்பா மைண்ட் பவர்  ஆகியவை குறித்து விவாதிக்கப்பதோடு சில பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மேலும் இந்த துறைகளில் உள்ள வல்லவர்களும் வர உள்ளனர். இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் இன்றைக்குள் எனக்கு தனியே செய்தி அனுப்பவும்.

முதல் சந்திப்புக்கு வந்த அத்துணை பேரும் வரவுள்ளனர். வர இருப்பவர்களுக்கு புதிய குழு உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

எனக்கு தகவல் வந்தவுடன் உங்களை அதில் இணைப்பேன். சென்னையில் எங்கு என்பது அந்த குழுவில் அறிவிக்கப்படும்.

    ஆவி உலக ஆராய்ச்சியாளர் ரமணி

     வர்மக்கலை தென்னரசு

     வாசியோகம் சண்முகம்

     சோதிடம் சபரி ஐயங்கார்

      மருத்துவம் சிவராமன்

இன்னும் பலதுறை வல்லுனர்கள் பங்கெடுக்க உள்ளனர்🙏

கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கண்ட whatsupp எண்ணிற்கு உடன் தகவல் அனுப்பவும்....

நல்லதே நடக்கும்....

பிரசாத் அவர்கள் 97913 05715
ஷண்முகம் 9590766607

5 டிச., 2015

சந்திப்பு தள்ளிவைப்பு

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

சென்னையில் நாளை 6ம் தேதி நமது குழுவின் இரண்டாவது மீட்டிங் மழை வெள்ளம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது...

எப்போது என்று நாளைக்குள் அறிவிக்கப்படும்.

சென்னை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

நல்லதே நடக்கும்....

2 டிச., 2015

நான்தான் கடவுளா?


நான்தான் கடவுளா?



அறிவியல் தளம்


நான் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றுமில்லாத சூன்யத்தில் ஆழ்ந்த உறக்கநிலையில் இருந்தேன். பின் குவாட்ரிக் ஆற்றலாக மெல்ல மெல்ல விட்டு விட்டு அதிர தொடங்கினேன். 

எனது அந்த மெல்லிய ஆற்றலின் அதிர்வு ஓம் என்று இருந்த்து. அதனால் மின்புலமாகவும் காந்தபுலமாகவும் மாறினேன். பிறகு மின்காந்த அலைகளாக வெளிப்பட்டேன். அலைகளாகிய நான் அணுக்களானேன். பின் பல கோடி அணுக்களாக பிரிந்தேன். 

ஆனால் அனைத்தும் நான்தான். 

பல கோடி அணுக்களாகிய நான் பல நுண் மாற்றங்களை உணர்ந்தேன். அவை அனைத்தும் என் மனதில் பதிந்தது. அந்த அறிவை பயன்படுத்தி புதுப்புது தனிமங்களாக மாறினேன். 

அடுத்து தனிமங்களில் ஏற்பட்ட மாறுதல்களும் என் மனதில் பதிந்த்து. இதனால் என் அறிவு நாளுக்கு நாள் மேம்பட்டது. அதை பயன்படுத்தி பஞ்ச பூதங்களாக மாறினேன். 

இன்னும் என் அறிவு மேம்படவே பஞ்ச பூதங்களாகிய நான் மிருகங்களாக மாறினேன். இன்னும் இன்னும் நிறைய அறிந்த நான் மனித உடலாக மாறினேன். இப்போது எனக்கு 13.7 பில்லியன் ஆண்டுகளாக நடந்த அனைத்தும் தெரியும். 

என் எண்ணங்கள் அனைத்தும் என் பல கோடி அணுக்களில் பதிந்துள்ளது. நான் மனிதனாக மாறிய பிறகு புதிய அனுபவங்களை பெற தொடங்கினேன். அந்த அனுபவங்கள் புதிதாகவும் பிடித்த மாதிரியும் இருந்ததால் அதிலேயே உழலுகிறேன். 

என் மனது அந்த அனுபவங்களையே மீண்டும் மீண்டும் கேட்பதால் நான் பழசை முற்றிலுமாக மறந்து மாயையில் சிக்கி கொண்டுவிட்டேன். 

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் என் பழைய நிலையை அடைந்துவிட்டால் மீண்டும் என்னை(பிரபஞ்சத்தை) கட்டுபடித்திவிடுவேன்.

ஆன்மீக தளம்

பிரம்மத்தில் மோன நிலையில் இருந்த என்னை ஓம் என்ற அதிர்வு உசிப்பிவிட்டது. பின் ஆற்றலாகி அணுக்களாகி அனைத்துமாகி உள்ளேன். நான்தான் மொத்த பிரபஞ்சம். மனிதர்கள் அனைவரும் என் சிறு பகுதிதான். நீயே நான். நானே நீ.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும்மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

{சிவவாக்கியர்}

மேலும் பயணிப்போம் இணைந்திருங்கள். 

உங்கள் பிரசாத் 

நன்றி.